முக்குலத்து வாக்குகளை குறிவைத்து வருகிறார் பிரதமர் - தேவர் ஜெயந்திக்கு மோடி வருவதற்கு வி.சி.க'வின் பயம்
தேவர் குருபூஜை பிரதமர் மோடி பங்கேற்பது முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்துதான் என வி. சி.க தரப்பிலிருந்து இப்பொழுது கதறல் துவங்கிவிட்டது.
By : Mohan Raj
தேவர் குருபூஜை பிரதமர் மோடி பங்கேற்பது முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்துதான் என வி. சி.க தரப்பிலிருந்து இப்பொழுது கதறல் துவங்கிவிட்டது.
தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, இடதுசாரிகள் கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கூறியதாவது, 'காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தமிழக முழுவதும் இன்று மக்கள் திரண்டு முழங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் காவி இயக்கங்கள் தமிழகத்தில் தன்னுடைய பிளவுகளை காட்ட வேண்டும் என வருகின்றன. இது உங்களுக்கான இடம் இல்லை' என பேசினார்.
மேலும் பேசிய அவர் பெயரால் இந்திய பிரதமர் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் உரிமை படைத்தார் ஆனால் ஏன் இங்கு வருகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும் சாதி ரீதியிலே தமிழ் மக்களை பிரிவுபடுத்தி அதில் அரசியல் லாபம் பார்க்கத் துடிக்கிறார்கள். ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் மக்களை ஒரே பேரில் அறிவிக்கிறோம் என பட்டியலில் இருந்து உங்களை வெளியேற்ற நாங்கள் சட்டமிட்டுகிறோம் என சொல்லி அவர்கள் இங்கே வந்து பேசினார்களே இப்போது முக்குலத்து மக்களின் வாக்குகளை குறிவைத்து தேவர் குருபூஜை மோடி அவர்கள் பங்கே இருக்கிறார்கள் இதை எல்லாம் பாராளுமன்ற 24 தேர்தலில் குறி வைத்து தான் செய்கிறார்கள்' என ரவிக்குமார் பேசினார்.