Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரசால் 3வது முறையாக அவமானப்படுத்தப்பட்டேன்! - பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் முதலமைச்சர்!

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்றது முதல் அமரிந்தர் சிங்குக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

காங்கிரசால் 3வது முறையாக அவமானப்படுத்தப்பட்டேன்! - பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் முதலமைச்சர்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Sep 2021 12:45 PM GMT

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்றது முதல் அமரிந்தர் சிங்குக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதாவது தனது வீட்டில் வைத்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னர் சண்டிகரில் ஆளுநுர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் அமரிந்தர் சிங். செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ராஜினாமா பற்றி பேசிய அமரிந்தர் சிங், தன்னுடைய கட்சித் தலைமையால் மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் எனவும், காங்கிரஸ் யாரை நம்புகிறதோ அவரைத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று கூறினார்.

மேலும், தற்போது நான் காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளேன். எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளேன். அது மட்டுமின்றி கட்சியில் நிலவிய ஊழல் விவகாரங்களே எனது ராஜினாமாவுக்கு காரணம் எனவும் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News