Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 10 ஆண்டுக்கு பா.ஜ.க. ஆட்சியே ! பிரதமர் மோடி இடத்திற்கு ராகுலால் வரவே முடியாது ! - பிரசாந்த் கிஷோர்!

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் வரவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுக்கு பா.ஜ.க. ஆட்சியே ! பிரதமர் மோடி இடத்திற்கு ராகுலால் வரவே முடியாது ! -  பிரசாந்த் கிஷோர்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Oct 2021 8:06 AM GMT

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் வரவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பிரசாந்த் கிஷோர் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.


இந்நிலையில், கோவா அருங்காட்சியத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் அடுத்த 10 வருடத்திற்கு பாஜக வலுவான கட்சியாக இருக்கும். அந்த கட்சியுடன் இன்னும் நாம் பல வருடங்களாக போராட வேண்டியிருக்கும். பாஜக அடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி பெறும். அப்படி பெறாவிட்டாலும் தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும் என்ற சந்தேகம் இல்லை.


மேலும் பிரதமர் மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால் பாஜக எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் ராகுல் நினைத்து வருகிறார். ஆனால் அது ஒருபோதும் நடைபெறாது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியவே முடியாது. அவரை எந்தக்காலத்திலும் தோற்கடிக்கவும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News