Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுலால் பிரதமர் மோடியை ஒருபோதும் எதிர்க்க முடியாது! - திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம்!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மம்தாவின் திட்டங்களை இந்த பத்திரிகை வாயிலாக எடுத்து செல்கின்றனர்.

ராகுலால் பிரதமர் மோடியை ஒருபோதும் எதிர்க்க முடியாது! - திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Sep 2021 11:58 AM GMT

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மம்தாவின் திட்டங்களை இந்த பத்திரிகை வாயிலாக எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 17) வெளியான கட்டுரை ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதமர் மோடியை எதிர்க்கின்ற விஷயத்தில் காங்கிரஸ் சார்பில் ஒருங்கிணைப்பு இல்லை. பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுலை தயார்படுத்த பல முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த வாய்ப்புகளில் ஒரு முறை கூட ராகுலால் வெற்றிபெற இயலவில்லை. அந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டார். மேலும் ராகுல் காந்தியால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க முடியாது. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பு கிடையவே கிடையாது.

அது மட்டுமின்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராகுலை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளதையும் அந்த கட்டுரையில் பிரசுரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News