Kathir News
Begin typing your search above and press return to search.

பணத்திற்கு செக் வைத்த ரஜினி.. கலக்கத்தில் மாவட்ட செயலாளர்கள்.!

பணத்திற்கு செக் வைத்த ரஜினி.. கலக்கத்தில் மாவட்ட செயலாளர்கள்.!

பணத்திற்கு செக் வைத்த ரஜினி.. கலக்கத்தில் மாவட்ட செயலாளர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2020 1:06 PM GMT

மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதை உறுதி செய்தார். டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டார் ரஜினி.


மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தியும், தலைமை ஆலோசகராக தமிழருவி மணியனும் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட செயலாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நாம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News