Kathir News
Begin typing your search above and press return to search.

பூமிக்கு அடியிலும் அணில்கள் ஓடுகின்றனவோ: செந்தில் பாலாஜியை கலாய்த்த ராமதாஸ்.!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் மின்தடை ஏற்படுகிறது. காரணம் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

பூமிக்கு அடியிலும் அணில்கள் ஓடுகின்றனவோ: செந்தில் பாலாஜியை கலாய்த்த ராமதாஸ்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2021 3:55 PM IST

மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் கருத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து இணையங்களில் மட்டும்மின்றி அரசியல் தலைவர்களிடமும் இருந்தும் அறிக்கைகள் வருகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் மின்தடை ஏற்படுகிறது. காரணம் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டனர். அதற்கு அவர் அனைவரும் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு ஒரு காரணத்தை சொன்னார் பாருங்க. மின் கம்பிகளில் கொடி படந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது எனக்கூறினார்.





அவரது கருத்தை கேட்ட செய்தியாளர்களே சிரித்திருப்பார்கள். இதனால் கடந்த சில நாட்களாகவே மின்தடை பற்றிய செந்தில் பாலாஜியின் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. விஞ்ஞானம்.. விஞ்ஞானம். சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News