Kathir News
Begin typing your search above and press return to search.

ஊட்டியில் ராசாவின் உருவப்படத்திற்கு துடைப்பக்கட்டையால் அடித்து கண்டனம் தெரிவித்த பெண்கள்.!

முதலமைச்சர் எடப்பாடி கள்ளத்தனமாகவும், குறை பிரசவத்தில் பிறந்தார் என மிகவும் கீழ்த்தரமான வார்த்தையால் பேசினார்.

ஊட்டியில் ராசாவின் உருவப்படத்திற்கு துடைப்பக்கட்டையால் அடித்து கண்டனம் தெரிவித்த பெண்கள்.!

ThangaveluBy : Thangavelu

  |  29 March 2021 3:43 AM GMT

நீலகிரி மாவட்டம், உதகையில் திமுக எம்.பி.ராசாவை கண்டித்து அதிமுகவினர் மற்றும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக எம்.பி. ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி கள்ளத்தனமாகவும், குறை பிரசவத்தில் பிறந்தார் என மிகவும் கீழ்த்தரமான வார்த்தையால் பேசினார். இவரது பேச்சு அங்கிருந்த திமுகவினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த பெண்களையே அதிர்ச்சியடைய வைத்தது.





இதனிடையே தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், பாமக, பாஜகவினர் என திரளாக கலந்து கொண்டு ராசாவின் செயலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போன்று நீலகிரி மாவட்டம், உதகையிலும் ராசாவிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் அதிமுக மகளிர் அணி மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, ராசாவின் உருவப்படத்தை துடைப்பக் கட்டையால் அடித்தனர்.

இதில் நீலகிரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மற்றும் அரசு வழக்கறிஞர் மகிளா நீதிமன்றம் மாலினி பிரபாகர் மற்றும் உதகை முன்னாள் நகரமன்ற தலைவர் சத்தியபாமா தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News