Kathir News
Begin typing your search above and press return to search.

வேளச்சேரி: 92வது வார்டில் தொடங்கியது மறு வாக்குப்பதிவு.!

வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்காளர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆண் வாக்காளர்கள் காலை முதலே சென்று வாக்களித்து வருகின்றனர்.

வேளச்சேரி: 92வது வார்டில் தொடங்கியது மறு வாக்குப்பதிவு.!

ThangaveluBy : Thangavelu

  |  17 April 2021 2:59 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு வி.வி.பாட் இயந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வி.வி.பாட் இயந்திரம் வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. அந்த இயந்திரத்தில் 15 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த வார்டில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.





இந்நிலையில், வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்காளர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆண் வாக்காளர்கள் காலை முதலே சென்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிவடைய உள்ளது. மறுவாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News