Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் ! - அதிரடி வேட்டைக்கு அனுமதியா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் ! - அதிரடி வேட்டைக்கு அனுமதியா?

Mohan RajBy : Mohan Raj

  |  23 Oct 2021 10:15 AM GMT

பாரத பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவிஏற்று ஒரு மாத காலம் ஆகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக சமூக விரோதிகள் கைது செய்யப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் ஊடுருவல், நக்சல் தொடர்பு கைதுகள் என அதிரடி வேட்டைகளில் ஆளுநர் ரவி மும்முரமாக செயல்படுகிறார். இந்த முக்கிய தருணத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் இன்று டெல்லியில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்வு விவகாரம், ஏழு பேர் விடுதலை, தமிழகத்தில் தொடரும் தேசிய புலனாய்வு துறையின் கைதுகள் போன்ற பல பிரச்னைகளில் ஆளுநரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி இன்று சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News