Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் நிலத்தை மீட்கக்கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., உட்பட தொண்டர்கள் கைது!

கோயில் நிலத்தை மீட்கக்கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., உட்பட தொண்டர்கள் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  31 March 2022 12:47 PM GMT

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சார்பில் மாரியம்மன் கோயில் முன்பாக தேங்காய் உடைக்கின்ற போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்., மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சார்பில், கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி சுமார் 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் இன்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடுக்க முற்பட்டனர். இதனால் அங்கு இரண்டு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இறுதியாக பாஜக எம்.எல்.ஏ., சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 20 பேரை போலீசார் கைது செய்தனர். தேங்காய் உடைத்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News