Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வி.சி.க. வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு!

போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வி.சி.க. வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  4 May 2022 6:22 AM GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோரை மிகவும் தகாத வார்த்தைகளில் பேசியதாக கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் காஜாமைதீன், மாநில பொதுச்செயலாளர் வன்னிஅரசு உட்பட 81 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது சட்டம் விரோதமாக கூட்டத்தை கூட்டியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் வாகனத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News