Kathir News
Begin typing your search above and press return to search.

நடமாடும் அலுவலகத்துடன் பா.ம.க. எம்.எல்.ஏ., அருள்: மற்றவர்களுக்கு முன்மாதிரி என பொதுமக்கள் பாராட்டு!

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., இரா.அருள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடமாடுகின்ற அலுவலகத்தை தொடங்கி வைத்து நேரடியாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதனால் அவரது முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.

நடமாடும் அலுவலகத்துடன் பா.ம.க. எம்.எல்.ஏ., அருள்: மற்றவர்களுக்கு முன்மாதிரி என பொதுமக்கள் பாராட்டு!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jan 2022 3:33 AM GMT

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., இரா.அருள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடமாடுகின்ற அலுவலகத்தை தொடங்கி வைத்து நேரடியாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதனால் அவரது முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.


சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாமகவை சேர்ந்த அருள் இராமதாஸ். இவர் தனது தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை காண்பதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றார். இவர் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் பொதுமக்களை தேடி நானே வருவேன் என பேசியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடமாடும் வாகனத்தில் அலுவலகம் அமைத்து பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வருகிறார். வாகனத்தில் மடிக்கணினி, பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து செல்கிறார்.

அது மட்டுமின்றி பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண், வாட்ஸ்அப் உள்ளிட்ட எண்களையும் கொடுத்துள்ளார். இவரது சேவை சேலத்தில் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அதே போன்று பொதுமக்கள் யாரேனும் பட்டா மாறுதல் தொடர்பாக கோரிக்கைகளை வைத்தால் அதே இடத்தில் கடிதம் தயாரித்து உடனடியாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கின்றார். அது மட்டுமின்றி சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கிறார். தமிழகத்திலேயே முதன் முறையாக நடமாடும் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்த அருள் இராமதாஸ் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News