Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வை எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்: சீமான் பேச்சு!

திமுகவை எதிர்க்கின்ற அளவிற்கு நாங்கள் வளர்ந்துள்ளோம் என்பதை நினைத்து பெருமைப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கின்ற தமிழக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

தி.மு.க.வை எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்: சீமான் பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  25 Dec 2021 6:17 AM GMT

திமுகவை எதிர்க்கின்ற அளவிற்கு நாங்கள் வளர்ந்துள்ளோம் என்பதை நினைத்து பெருமைப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கின்ற தமிழக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த திமுகவினர் இந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் திமுகவினரை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராத நிலையில், திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் சீமான் தலைமையிலான கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாது என்று சொல்வது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நாங்கள் வளர்ந்து இருப்பது இதில் இருந்து தெரிகிறது. ஜனநாயக வழியில் போராடுபவர்களை திமுக அரசு தடுக்க நினைப்பது சரியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Source: News 7 Tamil

Image Courtesy: DTnext

Next Story
கதிர் தொகுப்பு
Trending News