Kathir News
Begin typing your search above and press return to search.

'மலையோடு, மடு மோதலாமா?' - அண்ணாமலையை சாடையாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

சில மடுக்கள் மலையோடு மோத நினைக்கிறார்கள் என கோவையில் செந்தில் பாலாஜி கொந்தளித்துள்ளார்.

மலையோடு, மடு மோதலாமா? - அண்ணாமலையை சாடையாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

Mohan RajBy : Mohan Raj

  |  9 July 2022 8:15 AM GMT

சில மடுக்கள் மலையோடு மோத நினைக்கிறார்கள் என கோவையில் செந்தில் பாலாஜி கொந்தளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது, இந்த கூட்டத்தை நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்துவது ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, 'ஜூலை 15ஆம் தேதி மாலை பொள்ளாச்சியில் நடக்கும் பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதில் மாற்று கட்சியினர் பலர் தி.மு.க'வில் இணைய உள்ளனர் மேலும் இந்த செயற்குழு கூட்டத்தின் அடுத்த இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருக்க வேண்டும்.

மேலும் பேசிய அவர், 'சில பேர் கோவையிலும் பொள்ளாச்சிகளும் கூட்டங்களை நடத்திய மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், இந்த மேடை வாயிலாக கோவை டாக்டர் கலைஞர் அவர்களின் கோட்டையாக இருந்தது மீண்டும் இப்பொழுது தளபதி அவர்களின் இரும்புக்கோட்டை,யாக இருக்கிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்' என்றார்.

மேலும் பேசியவர் நாம் மலை, நமது தலைவர் ஒரு மலை சில மடுக்கள் மலையோடு 'மோத நினைக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் சில வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கருத்துக்களை செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என எதிர்க்கட்சிகளை குறிப்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு அவர் பேசினார்.


இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, கண்ணப்பன், கோவை மாவட்ட செயலாளர்கள் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க'வினர் பலர் கலந்து கொண்டனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News