Kathir News
Begin typing your search above and press return to search.

"நாற்காலியில் அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடிய மம்தா" - பா.ஜ.க புகார்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடியதாக மும்பை போலீசில் பாஜக புகார் அளித்துள்ளது.

நாற்காலியில் அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடிய மம்தா - பா.ஜ.க புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Dec 2021 12:43 PM GMT

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடியதாக மும்பை போலீசில் பாஜக புகார் அளித்துள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்தவாறு தேசிய கீதம் பாடியுள்ளார். அதுவும் சில வரிகளுடன் நிறுத்தியுள்ளார். இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், தேசிய கீதத்தை அவமதித்ததை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள பாஜகவினர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகன்களும் தேசிய கீதத்தை உயிராக கருதுகின்றனர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜிக்கு ஏன் இது தெரியவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source: Thanthi TV

Image Courtesy: Hindustan Times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News