Kathir News
Begin typing your search above and press return to search.

பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் எஸ்கேப் ஆக நினைத்த தி.மு.க. பிரமுகரை ஆதாரத்துடன் பிடித்த கடைக்காரர்!

சிவகாசியில் ஏற்கனவே இரண்டு பிரியாணியை சாப்பிட்டு மீண்டும் பிரியாணி கேட்க நினைத்த திமுக பிரமுகருக்கு இல்லை என்று திருப்பி அனுப்பிய கடைக்காரர்.

பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் எஸ்கேப் ஆக நினைத்த தி.மு.க. பிரமுகரை ஆதாரத்துடன் பிடித்த கடைக்காரர்!

ThangaveluBy : Thangavelu

  |  23 Oct 2021 3:32 AM GMT

சிவகாசியில் ஏற்கனவே இரண்டு பிரியாணியை சாப்பிட்டு மீண்டும் பிரியாணி கேட்க நினைத்த திமுக பிரமுகருக்கு இல்லை என்று திருப்பி அனுப்பிய கடைக்காரர்.

சிவகாசி, திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் தல கருப்பசாமி, மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தார். இதனிடையே திருத்தங்கல் காவல் நிலையம் எதிரே உள்ள பிரியாணி ஓட்டலில் சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் ஏற்கனவே இரண்டு பிரியாணிக்க பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். பழைய பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் அப்புறம் புதிதாக பிரியாணி கொடுக்கிறேன் என்று கறாராக சொல்லிவிட்டார். அப்போது கடைக்காரரிடம் நான் திமுக காரன் ஏமாற்ற மாட்டான் என்று கூறியபோது, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே திமுகவினர் கடந்த கால ஆட்சியின்போது ஓட்டலில் சாப்பிட்டு விட்டு கடைக்காரரின் முகத்திலேயே குத்திய வரலாறு உண்டு. தற்போது திமுக ஆட்சியில் உடன் பிறப்புகளின் சேட்டைகள் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது ஐயமில்லை. கடைக்காரர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து பேசும் நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

Source, Image Courtesy: FB



Next Story
கதிர் தொகுப்பு
Trending News