Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக நீதி காக்கின்ற தலைவர் பிரதமர் மோடி ! - எச்.ராஜா புகழாரம் !

பிற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 சதவீ ஒதுக்கீடு வழங்கி பிரதமர் மோடி சமூக நீதி காக்கும் தலைவராக உள்ளார் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சமூக நீதி காக்கின்ற தலைவர் பிரதமர் மோடி ! -  எச்.ராஜா புகழாரம் !

ThangaveluBy : Thangavelu

  |  11 Sep 2021 6:38 AM GMT

பிற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 சதவீ ஒதுக்கீடு வழங்கி பிரதமர் மோடி சமூக நீதி காக்கும் தலைவராக உள்ளார் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சமூதாய ஒற்றுமைக்காக தான் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. ஆனால் மாநில அரசு தடை விதித்துள்ளது. இது பற்றி கேட்டால் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதனை அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கடைப்பிடிக்க செய்தால் நேர்மையான அரசு என்று ஏற்றுக்கொள்ளலாம்.

மேலும் கரூரில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். சிலை செய்கின்ற இடத்தையும் பூட்டியுள்ளனர். அது மட்டுமின்றி சிலைகளையும் போலீசார் எடுத்து சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News