Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் மூலமாக அமித்ஷாவுக்கு கிடைத்த ரகசிய ரிப்போர்ட் - என்ன அது?

பிரதமர் மோடியின் மூலமாக அமித்ஷாவுக்கு கிடைத்த ரகசிய ரிப்போர்ட் - என்ன அது?

ThangaveluBy : Thangavelu

  |  5 Jun 2022 7:07 AM GMT

சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு ரகசிய அறிக்கை ஒன்றை கொடுத்திருப்பதாக தற்போது ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு மத்திய அரசு திட்டங்களை தொடங்க வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். இதற்கான விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே விழா முடிவடைந்து டெல்லி புறப்பட்ட சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். அந்த நேரத்தில் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி ஒரு ரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதனை நீங்கள் படித்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பி.எஸ், மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இது பற்றி தமிழக அரசின் சில அதிகாரிகள் வாயிலாக கடிதம் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ரிப்போர்ட்டில் இருக்கின்ற விஷயம் தெரிந்த பாடில்லை.

பிரதமர் மோடியிடம் நேரடியாகவே கொடுத்து விட்டதால் அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்ன இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தி.மு.க. தரப்பிற்கு கூறியுள்ளனர். அதாவது அந்த ரிப்போர்ட் மூன்று பக்கம் கொண்ட அறிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமரிடம் வழங்கப்பட்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்தாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் தி.மு.க.விற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தாலம் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Source: Samayam

Image Courtesy:Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News