Kathir News
Begin typing your search above and press return to search.

சொந்த தொகுதி மக்களுக்கே விபூதி அடிக்கும் ஸ்டாலின்.. விடியலை நோக்கி தமிழகம்.. யாரை ஏமாற்ற இது.!

சொந்த தொகுதி மக்களுக்கே விபூதி அடிக்கும் ஸ்டாலின்.. விடியலை நோக்கி தமிழகம்.. யாரை ஏமாற்ற இது.!

சொந்த தொகுதி மக்களுக்கே விபூதி அடிக்கும் ஸ்டாலின்.. விடியலை நோக்கி தமிழகம்.. யாரை ஏமாற்ற இது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 3:49 PM GMT

நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரில் பல்வேறு வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்தது.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மக்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது மழை நிவாரணம் கேட்டு பெண்கள் ஸ்டாலினிடம் முறையிட்டனர். அப்போது ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் நிவாரணம் தினமும் அளிக்க முடியாது. உன் பேரு லிஸ்டில் இருந்தால் மட்டும்தான் தர முடியும் என கூறினர்.

இதனை கேட்ட அப்பெண் என்னங்க இது, நீங்கள் ஜெயிச்ச தொகுதியில் மழை நிவாரணம் கேட்டு இரண்டு வாரங்களாக தவித்து வருகிறேன். எதுவும் செய்யாமல் இருக்கிறீர்கள் என கேட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஸ்டாலின் உடனடியாக அந்த இடத்தை விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தை காப்போம், விடியலை நோக்கினு இவர்தான் சுத்திட்டு இருக்காருனு தமிழக மக்கள் கேள்வி கேட்டுட்டு இருக்கிறார்கள். இவரது நடிப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News