"ஸ்டாலின் கொரோனோ, உதயநிதி உருமாறிய கொரோனோ" - அ.தி.மு.க வைகைச்செல்வனின் சரவெடி
"ஸ்டாலின் கொரோனோ, உதயநிதி உருமாறிய கொரோனோ" - அ.தி.மு.க வைகைச்செல்வனின் சரவெடி
By : Mohan Raj
அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதியை'யும் கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மு.க.ஸ்டாலின் கொரோனோ, உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனோ. பெண்களைப்பற்றி உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனை கேட்டுக்கொண்டு ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார். வாக்காளரிடம் கடன் சொல்லியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் டி.டி.வி.தினகரன். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளரிடம் ரூ.5 தருகிறேன் என்று சொல்லி கடன் வைத்திருக்கிறார்" என்று பேசினார்.
ஸ்டாலினையும், உதயநிதியையும் வைகைச்செல்வன் இவ்வாறு பேசியது கூடியிருந்த மக்கள் மத்தியில் மிகுந்த கைதட்டலை பெற்றது.