Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது, பிரசாந்த் கிஷோர் புத்திதான் இருக்கு.. அமைச்சர் ஜெயக்குமார்.!

ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது, பிரசாந்த் கிஷோர் புத்திதான் இருக்கு.. அமைச்சர் ஜெயக்குமார்.!

ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது, பிரசாந்த் கிஷோர் புத்திதான் இருக்கு.. அமைச்சர் ஜெயக்குமார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2021 5:58 PM GMT

சென்னை, தேனாம்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் 200 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீதத்திற்கும் மேல் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த மெட்ரோ ரயில் திட்டம் வட சென்னை மக்களின் பல நாள் கனவு. இதனால் வடசென்னையில் போக்குவரத்து முற்றிலும் குறையும். மக்களின் வாழ்வாதாரம் மேலும் சிறப்பாகும்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான வாட் வரி மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. மேலும் மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொந்தமாக சொல் புத்தி கிடையாது. அவர் பிரசாந்த் கிஷோர் புத்திதான் உள்ளது. அவர் சொல்வதை பேசி வருகின்றார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News