எழுதிக் கொடுத்தாலே பேச தெரியாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!
எழுதிக் கொடுத்தாலே பேச தெரியாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!
By : Kathir Webdesk
யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்துள்ளார். அதனைக்கூட சரியாகப் பார்த்து படிக்க தெரியாமல் மு.க.ஸ்டாலின் தடுமாறி வருகின்றார் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரில், பொங்கல் சிறப்பு தொகுப்பை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கரூரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட மக்கள் மட்டுமன்றி அருகாமையில் உள்ள மாவட்ட மக்களும் மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
ஆனால், நேற்று கரூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பச்சை பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதாவது கரூரில் இன்னும் மருத்துவக் கல்லூரி வரவில்லை என்று கூறுகிறார். ஒன்று எழுதிக் கொடுத்தவர் சரியாக எழுதி கொடுத்திருக்க வேண்டும். அல்லது அதனைபடித்தவர் சரியாக படித்திருக்கவேண்டும். இது இரண்டுமே நடக்கவில்லை.
தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளுங்கட்சியாக வந்தால் மக்கள் இதனை எண்ணிப்பாருங்கள் என்றார்.