Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மேல் வெறி பிடித்து பைத்தியம் பிடித்துவிட்டது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.!

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மேல் வெறி பிடித்து பைத்தியம் பிடித்துவிட்டது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.!

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மேல் வெறி பிடித்து பைத்தியம் பிடித்துவிட்டது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2021 7:01 PM GMT

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மேல் பதவி வெறிபிடித்து விட்டது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், கடுவையாற்றின் குறுக்கே 16 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கதவணை பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; திமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருக்காரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினர், வீராணம் திட்டத்தில் மெகா ஊழல் செய்தது திமுக. இது உலகளவில் தலை குனிவை ஏற்படுத்தியது. வீராணம் திட்டத்தை சுமார் 720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நிறைவேற்றி மக்களுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசுதான்.

மேலும், மெகா ஊழலை செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மீது பதவி வெறி பிடித்து பைத்தியம் பிடித்துவிட்டது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News