Kathir News
Begin typing your search above and press return to search.

நானே மனுவை வாங்கி, சீல் வைத்து ரசீது தருவேன்! பொய்களை அள்ளி வீசி பிரச்சாரத்திற்கு தயாராகும் ஸ்டாலின்!

நானே மனுவை வாங்கி, சீல் வைத்து ரசீது தருவேன்! பொய்களை அள்ளி வீசி பிரச்சாரத்திற்கு தயாராகும் ஸ்டாலின்!

நானே மனுவை வாங்கி, சீல் வைத்து ரசீது தருவேன்! பொய்களை அள்ளி வீசி பிரச்சாரத்திற்கு தயாராகும் ஸ்டாலின்!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2021 9:37 AM GMT

"மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன்" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் நம்பமுடியாத, செயல்படுத்த வாய்ப்பில்லாத பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை குறித்த அறிவிப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "மக்கள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஜனவரி 29ம் தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி. மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண்போம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

தேர்தல் அறிக்கை வேறு, விண்ணப்பத்தில் மக்கள் குறைகள் எழுதி கொடுத்தால் போதும், மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை www.stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள். சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு ஏற்பவே, கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்" என கூறினார்.

ஏற்கனவே தி.மு.க பதவி வேண்டுமாயின் எந்த நிலை வரை செல்லவும், எந்ந பொய் வேண்டுமானாலும் கூறவும் தயாராக இருப்பதாக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இந்த பிரச்சாரம் கடும் விமர்சனங்களையும், மக்களுக்கு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News