Kathir News
Begin typing your search above and press return to search.

கண்கலங்கிய ஓ.பன்னீர்செல்வம் ! நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். இவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கண்கலங்கிய ஓ.பன்னீர்செல்வம் ! நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Sep 2021 6:07 AM GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். இவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விஜயலட்சுமி கடந்த ஒரு சில வாரங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலினின்றி மாரடைப்பால் இன்று காலை 6.45 மணிக்கு காலமானார்.

இந்நிலையில், விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போன்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கி நின்றார். அவருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114454/Stalin-s-tribute-to-the-death-of-O-Panneerselvam-wife

Next Story
கதிர் தொகுப்பு
Trending News