Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலின் ஆட்சிக்கு வரமாட்டார்.. மக்களின் குறைகளை தீர்க்க மாட்டார்.. தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் உரை.!

ஸ்டாலின் ஆட்சிக்கு வரமாட்டார்.. மக்களின் குறைகளை தீர்க்க மாட்டார்.. தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் உரை.!

ஸ்டாலின் ஆட்சிக்கு வரமாட்டார்.. மக்களின் குறைகளை தீர்க்க மாட்டார்.. தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் உரை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Feb 2021 3:24 PM GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை, மக்களின் குறைகளை தீர்க்கவும் மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் உரையாற்றினார். ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், கையனூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக அரசு எப்போதும் மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம். கொரோனா காலக்கட்டத்தில் நிவாரண தொகை மற்றும் பொங்கன் பரிசாக ரூ.2500 வழங்கினோம். ஆனால் திமுக அப்படி கிடையாது, எப்போதும் மக்களிடம் எடுத்துதான் அவர்களுக்கு பழக்கம் ஆகும். அதிமுக ஆட்சியில் ஏழைக்குழந்தைகள் கல்வி கற்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

ஆனால் அதிமுக அரசு எந்த திட்டத்தையும் மக்களுக்கு செய்யவில்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார். நாட்டில் என்ன பிரச்சனை நடப்பது என்றே ஸ்டாலினுக்கு தெரியாது. அதுவும் சட்டசபைக்கு எதாவது வந்தால்தானே திட்டங்கள் பற்றி தெரியும்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் என்றைக்கும் முதலமைச்சராக வரபோவதில்லை, அவர்களுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கட்டும். அனைத்து மக்களும் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News