10 பேரை செட்டப் செய்து மனு பாக்ஸை தூக்கி செல்லும் ஸ்டாலின்! ஐபேக் மூளையை அப்படியே வாந்தி எடுக்கும் வேலை!
10 பேரை செட்டப் செய்து மனு பாக்ஸை தூக்கி செல்லும் ஸ்டாலின்! ஐபேக் மூளையை அப்படியே வாந்தி எடுக்கும் வேலை!

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செல்லுமிடம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் எதுவுமே நடைபெறவில்லை என்று அவதூறு பரப்பி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இப்போது ஸ்டாலின் திண்ணையில் பெட் சீட்டை போட்டு அமர்ந்து கொண்டு, 10 பேரை பேச வைத்துக் கொண்டு, ஒரு பெட்டியை வைத்துக் கொள்கிறார்.
அதில், உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள். மனுவை பெட்டியில் போடுங்கள் என்று கூறி வருகிறார். அதிலும் இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறுகிறார்கள், 10 பேரை செட்டப் செய்து வைத்துக் கொண்டு, அதில் ஏற்கனவே மனுவை போட்டு வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்க வேண்டும், என்ன பதில் சொல்ல வேண்டும் என்று செட்அப் செய்துதான் வருகிறார்கள்.
அங்கு போடப்படுகின்ற மனுவை பிரித்து படிப்பதில்லை, ஏற்கனவே செட்டப் செய்து போடப்பட்ட மனுவை தான் எடுத்து படிக்கிறார். அதைக்கூட சரியாக வைத்து படிப்பது கிடையாது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இது மக்களை ஏமாற்றுகின்ற நாடகம். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த போது மக்களிடத்திலே குறைகேட்டு, அதை நிறைவேற்றி இருந்திருக்கலாம். தி.மு.க எத்தனை முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.
அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நாட்டு மக்களை கண்டு கொள்ளவில்லை. அதனால் மக்கள் அவர்களை மறந்து விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்களிடம் குறைகேட்காத கட்சி திராவிட முன்னேற்ற கழக கட்சிதான்.
இதே போல 2019 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக ஒவ்வொரு திண்ணையிலும் அமர்ந்து மனு வாங்கினார். அந்த மனு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
தேர்தல் வரும்போது இப்படியெல்லாம் நாடகம் போட்டு, மக்களை திசை திருப்பி அதன் மூலம் வெற்றியை பெறுவது திராவிட முன்னேற்ற கழக கட்சியின் பாணி என முதல்வர் காட்டமாக விமர்சித்துள்ளார்.