Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் மத்தியில் இரட்டை அர்த்தத்துடன் பேசிய ஸ்டாலின் - பல் இளிக்கும் தி.மு.க கிராம சபை கூட்டங்கள்!

பெண்கள் மத்தியில் இரட்டை அர்த்தத்துடன் பேசிய ஸ்டாலின் - பல் இளிக்கும் தி.மு.க கிராம சபை கூட்டங்கள்!

பெண்கள் மத்தியில் இரட்டை அர்த்தத்துடன் பேசிய ஸ்டாலின் - பல் இளிக்கும் தி.மு.க கிராம சபை கூட்டங்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2021 7:14 PM GMT

அரசியல் தலைவர்கள் பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், கருத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும், மக்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும், அதிலும் ஆட்சிக்கு வர துடிக்கும் அரசியல் தலைவர்களின் பேச்சு மக்களின் வாழ்க்கை தரம் பற்றியும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்விதம் மக்களை சிறப்பாக ஆள்வோம் என சிறப்பாக கூறுவதாக இருக்க வேண்டும்.

மாறாக, மக்கள் மத்தியில் அநாகரிகமாக குறிப்பாக பெண்களை வைத்துக்கொண்டு மத்தியில் ஜாலியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இரட்டை அர்த்தத்துடன் முகம் சுளிக்கும் வகையில் பேசுவது அந்த அரசியல் தலைவரின் மனதில் உள்ள கெட்ட எண்ணத்தையும், அவர் கடந்து வந்த முறையற்ற வாழ்க்கை பாதையையும் பிரதிபலிக்கும். அந்த வகையில் பெண்கள் மத்தியில் "மங்காய்கள்" என இரட்டை அர்த்தத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க தேர்தலுக்காக நாடக கூட்டத்தை கூட்டி வருகிறது. இந்த கூட்டத்தின் ஏற்பாடு ஏதாவது கிராமத்தில் அரங்கேற்றப்பட்டு மக்களை பெருமளவில் வரவழைத்து நடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் அந்த கூட்டத்திற்கு வரவழைத்து கூட்டம் நடத்தப்படுகிறது. தி.மு.க தலைவர்கள் யாரேனும் அந்த கூட்டத்தில் பேசி வருகிறார்கள். பெரும்பாலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினே அதில் பங்கேற்று வருகிறார்.

இதில் நேற்றைய நாடக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகளிர் முகம் சுளிக்கும் வகையில் இரட்டை அர்த்தத்துடன் பேசியுள்ளர். அதில் பேசிய அவர் விழாவை ஏற்பாடு செய்த செந்தில் பாலாஜி'யை புகழ்கிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்தமாக பேசினார். அதில் அவர், "இங்கே கிராம சபை கூட்டம் நிறை பெண்கள் கூட்டத்துடன் நடந்து வருகிறது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல. இது கிராம சபை கூட்டம் மாதிரியாகவா உள்ளது? அப்படியே சுற்றி பார்த்துகொண்டே இருக்கலாம் என்பது போல் ஒரே பெண்கள் மயமாக உள்ளது" என பெண்களை பார்த்துக்கொண்டே பேசிய அவர் மேலும் கூறியதுதான் இன்னும் ஆபாசம். "விழா ஏற்பாட்டாளர் செந்தில் பாலாஜி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துள்ளார். மாங்காய் அடிப்பது என்றால் நீங்கள் வேறு நினைக்க வேண்டாம்" என இரட்டை அர்த்தம் தெறிக்க பெண்கள் மத்தியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஏற்கனவே கோவையில் "நீ வேலுமணி ஆள்தனே?" என கேள்வி கேட்டு பெண்ணை அடித்து துரத்தியது, கடலூரில் அரை அடி சேற்றில் பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை உழலவைத்தது என தி.மு.க-வின் கிராம சபை கூட்டங்கள் பல் இளிக்கும் வேளையில் இரட்டை அர்த்தத்துடன் பெண்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News