Kathir News
Begin typing your search above and press return to search.

சுப்புலட்சுமி ஜகதீசன் விலகல் - பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலா?

தி.மு.கவில் இருந்து வெளியேறும் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன்.

சுப்புலட்சுமி ஜகதீசன் விலகல் - பின்னணியில் முதல்வர் ஸ்டாலின்  குடும்ப அரசியலா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Sep 2022 12:39 AM GMT

தி.மு.கவின் மூன்று தலைவர்களின் உருவான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று தகவல்கள் வெளியாக்கி பெரும் பரபரப்பில் இருப்பது நேற்று சென்னை அறி பாளையத்தில் திமுக தலைவர் முதலமைச்சருமான முக்கா ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொட்ட குறிச்சி தொகுதியின் தி.மு.க வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் களம் இறக்கப்பட்ட தேர்தலில், அவர் 26 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார்.


அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ க வேட்பாளர் டாக்டர்.சி.சரஸ்வதி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்த தோல்வியை தொகுதியை சேர்ந்த இரண்டு ஒன்றியம் தி.மு.க செயலாளர் தான் காரணம் என்று அவர் கட்சி தலைமையிடம் குற்றம் சாட்டினார்கள். அதுமட்டுமின்றி அவர்களின் பொறுப்புகளையும் நிறுத்தி வைத்தார்கள். இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் சமூக ஊடகங்களின் சில கருத்துக்களை பகிர்ந்து வந்தார். குறிப்பாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க தலைமை மற்றும் தி.மு.கவின் பல நிர்வாகிகள் தங்களுக்கு தொடர்ச்சி துரோகம் செய்து வருவதாகவும் அந்த பதிவுகள் இருந்தன.


இந்நிலை சூழ்நிலையில் தான் தி.மு.கவை விட்டு சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி அவருடைய நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "தி.மு.கவை விட்டு சுப்புலட்சுமி ஜெகதீசனின் வெளியேறும் முடிவில் இருப்பது உண்மைதான். தொடர்ந்து அவர் கட்சியினரால் துரோகத்திற்கு ஆளாகி இருக்கிறார். அவருக்கு அவர் யாருக்கு பதவி அளிக்கக்கூடாது என்று நிறுத்தி வைத்திருந்தாரோ? அவர்களுக்கு உள் கட்சி தேர்தல் என்று பெயரில் பதவியை மீண்டும் வழங்கி இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News