Kathir News
Begin typing your search above and press return to search.

'மாரோ! மாரோ" என கத்திக்கொண்டே கொலைவெறியுடன் ஜீப்பை தாக்கிய கலவரக்காரர்கள் - சுமித் ஜெய்ஸ்வால் மூலம் வெளிவரும் உண்மைகள் !

மாரோ! மாரோ என கத்திக்கொண்டே கொலைவெறியுடன் ஜீப்பை தாக்கிய கலவரக்காரர்கள் - சுமித் ஜெய்ஸ்வால் மூலம் வெளிவரும் உண்மைகள் !

Mohan RajBy : Mohan Raj

  |  6 Oct 2021 8:15 AM GMT

லக்கிம்பூர் கலவரத்தில் நடந்தது என்னவெற்று விளக்குகிறார் பா.ஜ.க'வின் சுமித் ஜெய்ஸ்வால், இவரைத்தான் பா.ஜ.க'வின் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா'வின் மகன் சமித் ஜெய்ஸ்வால் என ஊடகங்களும், பிண அரசியல் செய்யும் கட்சிகளும் தவறாக மக்கள் முன் சித்தரிக்கின்றனர்.

லகிம்பூர் கெரி வன்முறைக்கு நேரில் கண்ட சாட்சியாக இருந்த சுமித் ஜெய்ஸ்வால் கூறியதாவது, "துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வரவிருந்த விழாவில் நாங்களும் இருந்தோம், விழா அந்த பகுதியில் நடந்து கொண்டிருந்தது, அவர் சிங்கியை அடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், நாங்கள் கலேச்சரன் மோர் இடத்தை நோக்கி சென்றோம் அப்போது, ​​சில போராட்டக்காரர்கள் டிகுனியா என்ற பகுதிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், நாங்கள் அவர்கள் அருகில் சென்றபோது, ​​கூட்டம் கூட்டத்தின் நடுவே வாகனம் நகர்ந்தது, பின்னர் அவர்கள் 'மாரோ, மாரோ' என்று கோஷமிட்டபடி குச்சிகளைக் கொண்டு அனைத்து வாகனத்தையும் தாக்கத் தொடங்கினர்.

மேலும் தொடர்ந்த அவர், "அந்த கலவரத்தில் தாக்கிய மக்கள் எங்கள் நகரத்தை சேர்ந்தவர்களோ அல்லது எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போல் கூட தெரியவில்லை, ஏனென்றால் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி ஆடை அணியமாட்டார்கள், அந்த மக்கள் மிகுந்த வன்முறையுடன் செயல்பட்டார்கள், அவர்கள் வாகனம் மற்றும் கற்களைத் தாக்குவதில் மட்டுமே உறுதியாக இருந்தனர். வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, ஜன்னல்கள் உடைந்தபோது, ​​வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரி ஓம் கண் மற்றும் தலையில் அடிபட்டு வாகனம் ஒரு மூலையின் அருகே கட்டுக்கடங்காமல் நின்றது. வாகனம் நின்றவுடன், கூட்டத்தினர் டிரைவரை சூழ்ந்து கொண்டு அவரை வாகனத்தில் இருந்து இறக்கி அவரை தாக்கத் தொடங்கினர்" என தாக்குதல் நடந்த முறையை விளக்கினார்.

மேலும் அந்த சம்பவம் பற்றி அவர் கூறும்போது, "கூட்டத்தில் கலவரக்காரர்கள் அனைவருமே கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், பெரிய தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாகவும்" ஜெய்ஸ்வால் கூறினார். அவர் எப்படியோ வாகனத்திலிருந்து தப்பினார். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுப்பம் குமாரைக் கொன்றதால் அந்த மக்கள் விவசாயிகளாக நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் ஜெய்ஸ்வால். 'ஒரு விவசாயி இதுபோன்ற அசுரத்தனத்தை செய்வது சாத்தியமில்லை' என உறுதியாக அவர் கூறியுள்ளார்.

சுபாம் மிஸ்ரா கொல்லப்பட்ட விதம் அதிர்ச்சியளிப்பதாகவும், மிஸ்ராவின் தலையில் பலமுறை தாக்கப்பட்டுள்ளதால் அவர் இறந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார். இந்த கொலையை விவசாயிகளால் செய்ய முடியாது என்றும் இருண்ட சக்திகள் தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். ஜெய்ஸ்வால் ஒரு பா.ஜ.க தொழிலாளி மற்றும் சிவ்புரியைச் சேர்ந்த நாகர் பாலிகா பரிஷத் லக்கிம்பூர் உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கது.


Source - Oplindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News