Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2020 6:24 PM GMT

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே போன்று ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியாகும் போதே அர்ஜுனமூர்த்தி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் ரஜினி.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, திருச்சி ரயில்வே நிலையம் அருகே, முருகன் கோயில் முன்பு ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் கலீல் உள்ளிட்ட, 40 பேர் மீது கொரானா தொற்று ஊரடங்கை மீறியதாக, கண்டோண்ட்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ரஜினி மன்ற நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News