Kathir News
Begin typing your search above and press return to search.

எத்தனை காலம்தான் இந்த நாட்டிலே ஏமாற்றுவார்கள்: தி.மு.க'வுக்கு எம்.ஜி.ஆர்.பாடலை நினைவுகூர்ந்த அண்ணாமலை!

எத்தனை காலம்தான் இந்த நாட்டிலே ஏமாற்றுவார்கள்: தி.மு.கவுக்கு எம்.ஜி.ஆர்.பாடலை நினைவுகூர்ந்த அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 9:55 AM GMT

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.விற்கு எதிராக பாடிய பாடல், ஊழலில் ஊறிப்போன தி.மு.க.வின் உண்மைத்தன்மையை தோலுரித்து உண்மைத்தன்மையை தோலுரித்து குறித்துக் காட்டுகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெறும் வயிறா பட்டினி வேலை செஞ்சு காட்டு நீ

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே...

அனைவருக்கும் வணக்கம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்,

சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்ஞ்

என்று புரட்சித்தலைவர் அவர்கள் திமுகவிற்கு எதிராகப் பாடிய பாடல், ஊழலில் ஊறிப்போன திமுகவின் உண்மைத்தன்மையை தோலுரித்து குறித்துக் காட்டுகிறது. இந்தப் பாடல் தற்போதைய ஆட்சிக்கு மிகத்துல்லியமாகப் பொருந்துகிறது.

தமிழகத்தில் ஓராண்டு காலமாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல், வணிகம் - தொழில் மேம்பாடு இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல், வெறும் சுய விளம்பரங்களைத் தேடிக்கொண்டு, திறமை இன்றி இருக்கிறது. மேலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கெல்லாம், தமிழக லேபிள் ஒட்டி, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கழக அரசுக்கு, மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைக்க பாஜக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

திமுகவின் வாக்குறுதிகளை நம்பி, வாக்களித்துவிட்டு பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும், தமிழக மக்களின் பாதிப்புக்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் பாஜகவின் மாவட்டங்கள் அறுபதிலும் நடைபெற இருக்கிறது.

சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களும் ஒன்றாக இணைந்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மிக மோசமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள்; பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்; கல்வித்துறையில் தொலைநோக்குப் பார்வையின்றி தொடர்ந்து நடைபெற்றுவரும் குழப்பமான நடவடிக்கைகள்; மொழியை, மதத்தை, இனத்தை, சாதியை முன்னிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் திட்டமிட்டு எதிர்க்கும் திமுகவின் தொடர் நடவடிக்கைகள்; தொழில் வணிகத் துறையில் தொடரும் எதிர்வினைகள்; விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைக் கைவிட்ட நிலையில் வைத்திருக்கும் ஆளும் திமுகவின் நடவடிக்கைகள், அனைவருக்கும் பெரும் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்து கொடுக்கவில்லை; கேஸ் சிலிண்டருக்கு தருவதாகச் சொன்ன மானியம் கொடுக்க வில்லை; பெட்ரோல்-டீசல் பொருட்களின் விலை களைக் குறைக்க வில்லை; கல்விக் கடன் ரத்து செய்யப்பட வில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நீட் தேர்வினை நீக்கி விடுவோம் என்று சவால் விட்டார்கள்... எதையாவது உருப்படியாகச் செய்தார்களா?

அவர்களால் செய்யமுடியாது. பாமர மக்களை ஏமாற்ற பசப்பு வார்த்தைகளைப் பேசமுடியும். செய்யமுடியாத, தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் வெட்டி வாய்ச்சவடால் விட்டுவிட்டு, வெறும் அறிக்கை அரசியலை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையான மக்கள் துன்பத்தைப் பற்றி ஒருவருக்கும் அக்கறையில்லை.

பட்டியல் இனத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம், ஒடிசா மாநிலத்தின் மலைச் சாதியைச் சேர்ந்த ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, நாட்டின் குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்திய போது, சமூக நீதிக்குக் குரல்கொடுக்கும் திமுக துள்ளிக்குதித்து வரவேற்று இருக்கவேண்டாமா? அதற்குப் பதிலாக உயர்சாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பது என்பது... திமுகவிற்கு உண்மையான கொள்கைப்பிடிப்பு என எதுவுமே கிடையாது. எந்த ஒரு செயலுக்கும் லாபநோக்கம் இல்லாமல், திமுகவால் செயல்படவே முடியாது என்பதை உணர்த்துகிறது.

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் பேசப்படுவதற்குப் பதிலாக முதல்வரையும் அவர் குடும்பத்தினரையும் துதிபாடும் நடவடிக்கைகளே அதிகம் எடுக்கப்படுகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. தங்களின் பதவி சுகத்தை முன்னிறுத்தி மக்கள் படும் துன்பத்தையும் மறந்து விட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைக் கண்டித்து ஒருநாள் பட்டினிப் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கிறது.

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் நம் தாமரைச் சொந்தங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்து மக்களை ஒன்று திரட்டி நடத்தும் இந்தப் போராட்டம் முழு வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் தழுவிய, ஆட்சிக்கு எதிரான போராட்டம். மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற்று ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்

நன்றி வணக்கம்!

அன்புச் சகோதரன்

உங்க ''அண்ணா'' இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News