சட்டமன்ற தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் தொடக்கம்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதே போன்று பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதே போன்று பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை முதல் 19ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
அதே போன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற 22ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழக தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.