Kathir News
Begin typing your search above and press return to search.

பூத் சிலிப் இல்லாத வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

பூத் சிலிப் இல்லாத வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Sept 2021 7:39 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதனிடையே வாக்குப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்ற அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் முடிந்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய கையேடு அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று வாக்காளரை எளிதில் அடையாளம் கண்டுப்பிடிப்பதற்காக வழங்கப்படும் பூத் சிலிப் இல்லை என்று வாக்காளர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்றும், பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Source, Image Courtesy: TopNews Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News