Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குச்சாவடியில் அட்டூழியம்! இவிஎம் இயந்திரங்களை உடைத்த தி.மு.க.வினர் மீது வழக்கு!

வாக்குச்சாவடியில் அட்டூழியம்! இவிஎம் இயந்திரங்களை உடைத்த தி.மு.க.வினர் மீது வழக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  20 Feb 2022 10:26 AM GMT

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று (பிப்ரவரி 19) நடைபெற்ற நிலையில் சென்னை, திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து இவிஎம் இயந்திரத்தை திமுகவினர் உடைத்து சேதப்படுத்திய நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 19) 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு நடைபெற்ற பெரும்பாலான வாக்குச்சாவடியில் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பல மாவட்டங்களில் வாக்களிப்பதற்கு வருவதற்கு அச்சப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதனிடையே சென்னையில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடியில் ஆளும் கட்சிகளின் பிரமுகர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட கட்சிகள் மீது ரவுடிகளை வைத்து திமுகவினர் தாக்குதலை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சென்னை ஒடைக்குப்பம் 179 வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் என்பவரும் தி.மு.க சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர்.

நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு நுழைந்தனர். அப்போது கொண்டிருந்த ஆயுதங்களுடன் வாக்குப்பதிவு மையத்தில் இருந்தவர்ளை மிரட்டத்தொடங்கினர். மேலும் அங்கிருந்த இவிஎம் இயந்திரத்தை உடைத்து நாசம் செய்தனர். அது மட்டுமின்றி வாக்குச்சாவடியில் இருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதனால் பலர் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறி விட்டனர். இந்த சம்பவத்தின்போது போலீசாரையும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வருவதற்குள் திமுகவினர் ஓட்டம் பிடித்து விட்டனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்ற திமுக பிரமுகர் அடியாட்களுடன் வந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த ஆட்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் கதிரவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று வாக்குப்பதிவின் போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அட்டூழியங்கள் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News