Kathir News
Begin typing your search above and press return to search.

பிரச்சாரத்துல ஒரு பேச்சு, ஜெயிச்சா ஒரு பேச்சா ? - தி.மு.க'வை பங்கம் செய்த எடப்பாடி !

EPS Comments.

பிரச்சாரத்துல ஒரு பேச்சு, ஜெயிச்சா ஒரு பேச்சா ? - தி.மு.கவை பங்கம் செய்த எடப்பாடி !

Mohan RajBy : Mohan Raj

  |  16 Aug 2021 9:45 AM GMT

"கடந்த தி.மு.க. ஆட்சியின் போது 2 ஏக்கர் நிலம் தருவோம் என வாக்குறுதி குடுத்தீர்களே? எத்தனை பேருக்கு குடுத்தீர்கள்" என சட்டசபையில் தி.மு.க'வை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்த போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

"கடந்த தி.மு.க. ஆட்சியின் போது நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றீர்கள். ஏதோ கணக்குக்காக ஒரு சிலருக்கு கொடுத்துவிட்டு நிறுத்தி விட்டீர்கள். முழுமையாக யாருக்கும் கொடுக்கவில்லை. இப்போது 2021'ல் தி.மு.க. வாக்குறுதியில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 கொடுப்பதாக அறிவித்திருந்தீர்கள்.

ஆனால் இப்போது ஏழ்மையான குடும்பத்தலைவிகளுக்கு கொடுக்க இருப்பதுபோல் பேச்சுக்கள் வருகிறது. தேர்தல் நேரத்தில் ஒரு கருத்தும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு கருத்துமாக கூறி வருகிறீர்கள்" என தி.மு.க'வின் அரசியலை சட்டமன்றத்தில் தோலுரித்தார்.


Source - மாலை மலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News