Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்.. 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.!
தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
![தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்.. 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.! தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்.. 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.!](https://kathir.news/h-upload/2021/05/02/979372-frtgds.webp)
By :
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) 8 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பின்னர் 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது.
காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். அதிமுக, மற்றும் திமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட 5 கட்சிகள் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story