முதல்வரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம் - ஆ.ராசா மீது பாய்ந்த வழக்கு.!
முதல்வரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம் - ஆ.ராசா மீது பாய்ந்த வழக்கு.!
By : Mohan Raj
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூறாக ஆ.ராசா விமர்சித்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் தி.மு.க பொதுச்செயலாளர் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி'யை விமர்சித்தார் மேலும் ரசிக்க இயலாத வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். இதற்கு அ.தி.மு.க'வினர் மத்தியில் மட்டுமல்ல தமிழக மக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவியது.
இந்த நிலையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணை வரும் வாரங்களில் நடக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.