Kathir News
Begin typing your search above and press return to search.

செவிலியர்களை வீதியில் போராடவைத்து வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு - இதுதான் திராவிட மாடலா என கொதிக்கும் செவிலியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்

செவிலியர்களை வீதியில் போராடவைத்து வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு - இதுதான் திராவிட மாடலா என கொதிக்கும் செவிலியர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jan 2023 1:12 PM GMT

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவல் அதிகாரத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்கு பிறகு 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது, மீதமுள்ள 3000 பேருக்கு பணிக்கால ஒப்பந்த முடிவடைந்து நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தி.மு.க அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது, இதனையடுத்து செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் போராட்டத்திலும் இறங்கியது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் 708 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மீண்டும் பணி வழங்கப்படும் எனவும் சம்பளம் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்கப்படும் எனும் திமுக அரசு செவிலியர்களை சமாதானப்படுத்த முயற்சித்தது. ஆனால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் 7வது நாளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதற்கட்டமாக செவிலியர்களிடம் மருத்துவ துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்டமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சு வார்த்தையும் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 3000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளது அந்த பணியிடத்தில் எங்களை பனி நிரந்தரம் செய்யவேண்டும் என நியாயமான கோரிக்கையுடன் செவிலியர்கள் போராடி வருகின்றனர், ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த போழுது ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆதரவாக நின்ற திமுக ஆளுங்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க மறுப்பது செவிலியர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

குறிப்பாக செவிலியர்கள் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியை நீட்டிப்பு வேண்டாம் டி.எம்.எஸ் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள், ஆனால் அதற்கு திமுக அரசு வாய்ப்பில்லை எனக்கூறி அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில் திமுக அரசு தங்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் செவிலியர்கள். அவர்கள் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை வைத்து மிரட்டுவது போன்ற பல யுக்திகளை திமுக அரசு கையாண்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News