Kathir News
Begin typing your search above and press return to search.

திண்டுக்கல் மாநகராட்சியில் மலர்ந்த தாமரை: தொண்டர்கள் உற்சாக கொண்டாடம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தனித்து களம் கண்டது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி 1வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதனை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் மலர்ந்த தாமரை: தொண்டர்கள் உற்சாக கொண்டாடம்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Feb 2022 5:05 AM GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தனித்து களம் கண்டது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி 1வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதனை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 12,820 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

அதன்படி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முடிவுகள் ஒரு சில வார்டுகளில் வந்து கொண்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 1வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மாநகராட்சிக்கு பாஜக செல்ல உள்ளது. எனவே முதல் வெற்றியை திண்டுக்கல் மாநகராட்சி பதிவு செய்திருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News