Kathir News
Begin typing your search above and press return to search.

டாடா நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஓசூருக்கு வருகிறது - அண்ணாமலை

டாடா நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஓசூருக்கு வருகிறது - அண்ணாமலை

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2022 12:29 PM GMT

டாடா நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 19,000 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது என்று ஓசூரில் நடைபெற்ற 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் பா.ஜ.க.வின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கடந்த 1947ல் இருந்து எந்த அரசும் செய்யாத நிர்வாக மாற்றங்களை கடந்த 8 ஆண்டுகளில் பா.ஜ.க. செய்துள்ளது. இதுவரையில் பா.ஜ.க. மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியாது.

மேலும், டாடா நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகிறது. இதன் மூலம் 19,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார். அது மட்டுமின்றி 8 ஆண்டுகளில் 99.50 சதவீத வீடுகளில் கேஸ் இணைப்பு உள்ளது. பெண்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். நாடு முழுவதும் 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெயரிலேயே 68 சதவீதத்திற்கும் மேல் பட்டா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 7 Tamil

Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News