Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர்!

தி.மு.க. வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர்!

ThangaveluBy : Thangavelu

  |  19 Feb 2022 9:54 AM GMT

திமுகவில் உள்ள வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மற்றும் ஒரு நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே காவேரிப்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள் பேட்டியில், தற்போது நடைபெறும் திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவை நம்பிய மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு. இது போன்று அனைத்து வகையிலும் ஸ்டாலின் அரசு தோற்றுவிட்டது.

மேலும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் வாரிசுகள் ஆணவத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் ஆணவப் பேச்சுக்கு மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் நல்ல பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

Source, Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News