ஆட்சியரின் 'அறியப்படாத கிறிஸ்தவம்' புத்தகத்திற்க்கு பதிலாக 'அர்த்தமுள்ள இந்துமதம்' வழங்கிய பா.ஜ.க
முதல்வர் ஸ்டாலினிடம் அறியப்படாத கிறிஸ்தவம் என்ற புத்தகத்தை அளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பதிலடி தரும் விதமாக கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தை புதுக்கோட்டை பா.ஜ.க'வினர் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
முதல்வர் ஸ்டாலினிடம் அறியப்படாத கிறிஸ்தவம் என்ற புத்தகத்தை அளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பதிலடி தரும் விதமாக கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தை புதுக்கோட்டை பா.ஜ.க'வினர் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8'ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வந்திருந்த பொழுது அவரிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் 'அறியப்படாத கிறிஸ்தவம்' என்ற நூலை வழங்கினார்.
ஒரு மாவட்ட ஆட்சியர் அரசு விழாவில் எப்படி முதல்வருக்கு மதம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை வழங்கலாம்? என விமர்சனங்கள் எழுந்தது மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு க்ரிப்டோ கிறிஸ்தவர் என்ற விமர்சனங்களும் எழுந்த நிலையில் இது சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற புதுக்கோட்டை பா.ஜ.க'வினர் அறியப்படாத கிறிஸ்தவம் என்ற நூலை முதல்வருக்கு அளித்த மாவட்ட ராமு'விற்கு பதிலடி தரும் விதமாக 'அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தை அளித்தனர், இது தற்போது இணையங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.