ஸ்டாலின் கூட்டத்தில் புகுந்த பாம்பு.. கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்.!
ஸ்டாலின் கூட்டத்தில் புகுந்த பாம்பு.. கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்.!
![ஸ்டாலின் கூட்டத்தில் புகுந்த பாம்பு.. கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்.! ஸ்டாலின் கூட்டத்தில் புகுந்த பாம்பு.. கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/88e95f9d9d53a53f5bd59f56bde6888f.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் போலியான கிராமசபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் வெறும் திமுகவினரை மட்டும் அனுமதித்துக்கொண்டு எழுதி கொடுத்ததை பேசிவிட்டு செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
அதே போன்று இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியம், அவளிவநல்லூர் ஊராட்சியில் போலியான கிராமசபைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மகளிர் திமுகவினர் பங்கேற்றனர். உதயசூரியன் உதிக்கும், இருள் அகலும் தாய்மார்களின் இன்னல்கள் மறையும் என பேசினார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசிகொண்டிருந்தபோது, பெண்கள் கூட்டத்தில் இருந்த பலரும் காரணம் தெரியாமல் எழுந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இதனை கவனித்த ஸ்டாலின் இது கிராம பகுதி அதனால், அங்கு ஏதாவது ஓணான் வந்திருக்கும். யாரும் பயப்பட வேண்டாம் என்று பேசினார். இதனை காதில் வாங்காத பெண்கள் ஓட்டம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.