'ஒரு காலத்துல கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு ரவுடியிசம் செஞ்சுட்டு இப்ப மிரட்டலா?' - சேகர்பாபுவை பந்தாடும் ஹெச்.ராஜா
தேனி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பங்களாமேடு பங்களா மேட்டில் நேற்று மாலை நடைபெற்றது
By : Mohan Raj
தேனி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பங்களா மேட்டில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது, 'ஒரு காலத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ரவுடியிசம் செய்து வந்தவர் சேகர்பாபு இவர் அமைச்சரான பிறகு மதுரை ஆதீனத்தை மிரட்டுகிறார்' என்றார்.
'முதல்வர் அடக்கி வைத்திருப்பதால் தான் அமைதியாக இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் நாவை அடக்கி பேச வேண்டும், ஆதீனத்தை மட்டுமல்ல காவி துண்டு அணிந்தவர்களை சீண்டினால் விடமாட்டோம் மதுரை ஆதீனம் தலைமையை ஏற்று அவரின் பின்னே பா.ஜ.க'வினர் நிற்பார்கள்' என்றார்.
கோவில் நிலங்களை மீட்கவும் என்கின்றனர் ஆனால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் குயின்ஸ் லேண்ட் மீட்கப்படவில்லை அவர்களிடம் ஒன்பதரை கோடி ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் அதையும் வசூலிக்கவில்லை' என்றார் ஹெச்.ராஜா.