Kathir News
Begin typing your search above and press return to search.

கருத்து சுதந்திரத்துக்கும் அளவு இருக்கிறது.. மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் குட்டு.!

கருத்து சுதந்திரத்துக்கும் அளவு இருக்கிறது.. மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் குட்டு.!

கருத்து சுதந்திரத்துக்கும் அளவு இருக்கிறது.. மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் குட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 3:46 PM GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலமைச்சரை கடுமையான சொற்களால் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற கருத்துக்களை கூறுவது மக்களிடையே தவறாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே ஆதாயத்துக்காக கட்சி தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. ஆரோக்கியமான அரசியலை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டும். என்று நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News