Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.!

அரசு அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.!

அரசு அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 4:33 PM GMT

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்களின் கோரிக்கைகளை ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல், மழை, வறட்சி காரணங்களால் பல்வேறு துன்பங்களை விவசாயிகள் சந்தித்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயிர்கடன் தள்ளுபடி செயயப்பட்டது.

மேலும், விவசாயிகள் நீண்டநாட்கள் மின்சாரம் குறித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்றார். மேலும் அவர் பேசியதாவது: எந்த ஒரு மாநில அரசும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்தும். கடன் வாங்க வேண்டிய சூழல் இருப்பதால் கடன் வாங்கப்படுகிறது.

எனவே எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தேவையில்லாமல் பொய் பேசி வருகிறார். எதற்கு எடுத்தாலும் தான் அறிவித்ததை அவர் அறிவித்தார் போன்று சொல்லிகிறார். தேர்தலுக்கும் அரசு அறிவிப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News