Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க தேவையில்லை.. ஸ்டாலின் ஒருவரே போதும்.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க தேவையில்லை.. ஸ்டாலின் ஒருவரே போதும்.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க தேவையில்லை.. ஸ்டாலின் ஒருவரே போதும்.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Dec 2020 1:15 PM GMT

திமுகவை அழிப்பதற்கு மு.க.ஸ்டாலின் ஒருவரே போதும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக அரசு பாடுபட்டு வருகிறது. அதே சமயத்தில் விட்ட இடத்தை பிடித்து விட முனைப்பு காட்டி வருகிறது திமுக. இதற்கான பணிகளை கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. சாதாரண தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி அதிமுகதான்.

திமுகவில் அப்படி இல்லை, கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே பதவி என்பது எழுதி வைக்கப்பட்ட ஒன்று. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. திமுகவிற்கு எதிரியே ஸ்டாலின்தான், ஸ்டாலினுக்கு எதிரி அவருடைய நாக்குதான், திமுகவை அழிக்க மற்றவர்கள் தேவையில்லை அவர் ஒருவரே போதும் என்றார்.

இவரது பேச்சு போன்றுதான் அரசு திட்டங்களை ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். நல்ல திட்டங்களையும் போகின்ற போக்கில் விமர்சனத்தை முன்வைத்து செல்கின்றார். அதுவும் மக்களிடத்தில் ஏதாவது வாய்க்கு வந்ததை பேசிவிட்டு வசமாக மாட்டிக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News