Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் கிராமங்களில் கூட சங்பரிவார்கள் பரவிவிட்டார்கள் - அலறும் திருமாவளவன் !

தமிழகத்தில் கிராமங்களில் கூட சங்பரிவார்கள் பரவிவிட்டார்கள் - அலறும் திருமாவளவன் !

Mohan RajBy : Mohan Raj

  |  31 Oct 2021 8:15 AM GMT

இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் ஊடுருவி வருவதாக திருமாவளவன் அரசியல் பயந்துடன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "திருவிழாக்களுக்கு உதவி செய்வது போலவும், சாமி சிலைகளை வாங்கிக் கொடுப்பது போலவும் உதவி செய்து தமிழகத்தில் இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் ஊடுருவி வருவதாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமம் கிராமமாக சென்று தன்னார்வலர்கள் என்ற பெயரில் சங் பரிவார்கள் நச்சு அரசியலை விதைப்பதாகவும் தமிழகத்தை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள்" என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஜாதிமறுப்புத் திருமணங்கள் இன்று உருவானது அல்ல என்றும் திருமாவளவன் வந்த பிறகு தான் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக நாடக அரசியல் செய்யும் கும்பல் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.


Source - One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News