Kathir News
Begin typing your search above and press return to search.

'இதெல்லாம் சகஜம்தான்' - வீராங்கனை பிரியா உயிரிழந்ததை அசால்ட்டாக கூறிய கே.எஸ்.அழகிரி

வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்திற்கு 'மருத்துவமனைகளில் கவனக் குறைவு என்பது இயல்புதான்' என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் சகஜம்தான் - வீராங்கனை பிரியா உயிரிழந்ததை அசால்ட்டாக கூறிய கே.எஸ்.அழகிரி

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2022 2:20 PM GMT

வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்திற்கு 'மருத்துவமனைகளில் கவனக் குறைவு என்பது இயல்புதான்' என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

'அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவு ஏற்படுவதும், மரணம் நிகழ்வதும் இயல்புதான்' என கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.அழகிரி பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வால்டக்ஸ் சாலையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவரிடம் பிரியா மரணம் அடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர், 'கவனக்குறைவு என்பது இயல்புதான் அதனை நியாயப்படுத்துவது தான் தவறு' என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News